சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு

4 months ago 15

சென்னை: சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டதில் 35 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளியின் ஆய்வகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தலைமை ஆய்வக அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article