சென்னை: தலைமைச் செயலகம் எதிரே பள்ளி வேன் உள்பட அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். சென்னை ராஜாஜி சாலையில் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. எதிரே சாந்தோமில் உள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தலைமைச் செயலகம் எதிரே செல்லும்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப் தடுப்புகளை தாண்டி வலதுபுறம் திரும்பி எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது.