சென்னை சிட்டி கியூ பிராஞ்ச் வழக்குகளில் ஆஜராக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்: அரசாணை வெளியீடு

1 week ago 3


சென்னை: சென்னை பெருநகர கியூ பிராஞ்ச் போலீசார் தொடர்ந்த 6 வழக்குகளில் காவல்துறை தரப்பில் ஆஜராவதற்காக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக சி.எஸ்.எஸ்.பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை (நீதிமன்றம்) வெளியிட்டுள்ள அரசாணையில், “சென்னை பெருநகர கியூ பிராஞ்ச் போலீசார் பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வழக்கு திருவொற்றியூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதேபோல், கியூ பிராஞ்ச் போலீசார் பதிவு செய்த 4 பாஸ்போர்ட் சட்ட வழக்குகள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தாம்பரம் நீதிமன்றத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் பதிவு செய்த ஒரு வழக்கு விசாணையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகளில் ஆஜராவதற்காக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக சி.எஸ்.எஸ்.பிள்ளை நியமனம் செய்யப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை தேசிய புலனாய்வு முகமைக்காக பல வழக்குகளில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முத்திரைத்தாள் மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூடுதல் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை சிட்டி கியூ பிராஞ்ச் வழக்குகளில் ஆஜராக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article