சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

2 months ago 11

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

கடந்த மாதம்தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

Read Entire Article