சென்னை குறளகத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்

7 months ago 48

சென்னை: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு, தீபாவளி கதர் சிறப்பு விற்பனை மற்றும் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் வளாகத்தில் இன்று (அக்.2) நடைபெற்றது.

இதில், பால்வளம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதல் பட்டுப் புடவை விற்பனையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article