மும்பை: மும்பையிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், கேபினுக்குள் இருந்து எரியும் புகை நாற்றம் வந்ததால், மீண்டும் மும்பைக்கு சென்றது. மும்பையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா ஏஐ 639 விமானம் ஜூன் 27 அன்று புறப்பட்டது. விமான கேபினில் எரியும் புகை நாற்றம் எழுந்தது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மீண்டும் மும்பைக்கு திரும்பியது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதுபற்றி ஏர்இந்தியா தரப்பில்,‘எங்கள் விமானங்களில் ஒன்றில் குறிப்பிடப்படாத பாதுகாப்பு எச்சரிக்கை கண்டறியப்பட்டது.
நிலையான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. ஏர் இந்தியா அதன் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது. முன்னதாக, டெல்லியில் இருந்து ஜம்முவுக்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் விமானத்தின் நடுவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. அகமதாபாத் விமான விபத்தில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து சரிவர இயக்க முடியாமல் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
The post சென்னை விமானத்தில் திடீர் புகை நாற்றம்: மும்பைக்கு மீண்டும் சென்றது appeared first on Dinakaran.