![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39102645-state-05.webp)
சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பொன்னேரி-கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (13-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்-பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்."
இவ்வாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.