சென்னை கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு

2 months ago 10

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் பிரிவு மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் இச்சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்று பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

Read Entire Article