சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை முதல் மீண்டும் ரயில் சேவை: 14 மாதத்துக்கு பிறகு தொடக்கம்

4 months ago 17

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் நாளை (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தினசரி இரு மார்க்கமாகவும் தலா 45 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.

Read Entire Article