சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய் சுந்தர் பிரசாந்த் கூட்டணி ஜான் லாக் (ஜிம்பாப்வே)- ரியோ நோக்குச்சி (ஜப்பான்) இணையுடைன் மோதியது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய்பிரசாந்த் கூட்டணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதே போல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ரஷியாவின் இகோர் அகாபோனோவ்- எவ்ஜெனில் துர்னெவ் இணையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.