சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; ஒப்பந்த தொழிலாளர் கைது

5 hours ago 1

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி வேறு கல்லூரியை சேர்ந்தவர் என்றும், அவர் ஐ.ஐ.டி. கல்லூரிக்கு வந்திருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், கல்லூரி வளாகத்திற்குள் ஒப்பந்த அடிப்படையிலான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர் ஒருவர், கடந்த 25-ந்தேதி மற்றொரு கல்லூரியில் இருந்து வந்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதை கேட்டு அங்கிருந்த காவலாளிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளரை மடக்கிப் பிடித்து, பின்னர் போலீசில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி நிர்வாகம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டுள்ளது என்றும், அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி சூழலை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் ஐ.ஐ.டி. நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article