சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்துக்கு எதிரே நடைபாதையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு பெட்டிக்குள்ளும், நடைபாதையிலும் சிதறி கிடக்கும் மதுபாட்டில்களால் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்துக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதே வளாகத்தில் கன்னிமாரா பொது நூலகமும், தேசிய கலைக்கூடமும் செயல்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகளுடன் மாணவர்களும், இளைஞர்களும் அதிகளவில் வருகை தருகின்றனர்.