சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவர்களது உருவச்சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:1938-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் அப்போதைய முதல்வர் ராஜாஜி, ‘தமிழக மாணவர்கள் இனி கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி, அண்ணா போன்ற தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் தாய்மொழி காக்க களம் கண்டனர்.