சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 நீதிபதிகள் நேற்று நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்பராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் இந்த மாதத்தில் ஓய்வு பெறுகின்றனர். இதன் காரணமாக நீதிபதிகளின் காலிப்பணிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இருவருக்கும் நேற்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023ம் ஆண்டு குமரப்பன், ராஜசேகர் ஆகியோர் பணியில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை உயர் நீதிமன்ற 2 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் appeared first on Dinakaran.