சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடியில் கட்டப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு

4 months ago 16

சென்னை: சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள் உட்பட 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. பட்டு மற்றும் பருத்தி ரக வகைகளின் பாரம்பரிய மற்றும் நாகரிக சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்குகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைக் காலங்களில் புதிய வடிவமைப்பு ரகங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை எப்போதும் கவர்ந்து வருகிறது.

Read Entire Article