சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

2 months ago 12

சென்னை: சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். கனடா நாட்டில் கோயில் மீதும், இந்து பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

இதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில், நிர்வாகிகள் குமரவேல், பாரதமாதா செந்தில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் அங்கு வரத் தொடங்கினர். அப்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருந்ததாக கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர்.

Read Entire Article