“என்னை சோதிக்காதீர்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனைக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசினோம்.
செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறதே? - அண்ணன் செங்கோட்டையன் ஆதங்கத்தில் இருக்கிறார், வருத்தத்தில் இருக்கிறார், கோபத்தில் இருக்கிறார் என்பதற்கெல்லாம் அவரே நேற்று முன்தினம் தெளிவாக பதில் கூறி விட்டார். “இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், வலுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்” என்று அவர் தெளிவாகச் சொன்ன பிறகும் அதைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.