செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் அதிருப்தி

4 months ago 28

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓரேசமயத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், அரசியல்வாதிகள் நிர்பந்தம் காரணமாக இந்த பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பி.ஜே.கலைச்செல்வன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பி.உ.அரி பாஸ்கர் ராவ், திருப்போரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read Entire Article