செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட்

19 hours ago 2

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக ஐகோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. மதுராந்தகம் தாலுகா ஆனைகுன்றத்தில், கிராம உதவியாளராக இருந்த முனுசாமி கடந்த 2001ம் ஆண்டு மரணமடைந்தார். முனுசாமியின் மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், 3 மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க 2023ல் உத்தரவிட்டிருந்தது.

உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி, 2024ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். செங்கல்பட்டு ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியர் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article