செங்கல் சூளையில் தவறி விழுந்த வாலிபர் பலி

3 days ago 2

 

ஈரோடு, மே 8: ஈரோடு வைராபாளையம் காவேரிக்கரை பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் சசிக்குமார் (23). திருமணம் ஆகாதவர். இவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு, செங்கல் சூளையில் செங்கல் அடுக்கி வைத்திருக்கும் பகுதியில் மது குடித்துள்ளார். பின்னர், காலை வேலைக்கு வராததால் அவரது அண்ணன் சதீஷ் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தபோது, செங்கல் சூளையில் செங்கல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சந்தில் தவறி விழுந்து, காயம் அடைந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சசிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல் சூளையில் தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article