சூரியனார்கோவில் ஆதீனத்தை வெளியேற்றிய பொதுமக்கள்: மடத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு

7 months ago 24

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள்,. 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஹேமஸ்ரீ (47), என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூரியனார் கோவில் ஆதீனத்திடம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான அறிக்கை கேட்டு பெற்று சென்றனர்.

Read Entire Article