சூதாடிய 5 பேர் கைது

4 months ago 11

மல்லூர், ஜன.19: பனமரத்துப்பட்டி அடுத்த நல்லியம்புதூரில் பணம் வைத்து சூதாடுவதாக, பனமரத்துப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (31), தமிழரசன்(32), கந்தசாமி(44), தினேஷ்(25), தனசேகர்(23) உள்ளிட்ட 5பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சூதாடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article