வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த சில மாதமாக கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்த வந்த நிலையில் சாரல் மழை நீடித்து வருகிறது.
இதனால் வால்பாறை பகுதி முழுவதும் குளுமையான சீதோசணம் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள், மலைகள் மூடுபனியால் சூழந்து அழகாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகளை உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
வால்பாறையில் பொழுதுபோக்கு அம்சமாக உள்ள பூங்கா மற்றும் படகு இல்லத்தில் கூட்டம் காணப்பட்டது. நேற்று முன்தினம் கனமழை காரணமாக படகு சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் வெயில் நிலவியதால் படகு சேவை மீண்டும் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
The post சுற்றுலா பயணிகள் உற்சாக படகு சவாரி appeared first on Dinakaran.