சுற்றித்திரிந்த 4 பேர் கைது

2 weeks ago 2

நாகப்பட்டினம், ஜன.26: நாகப்பட்டினத்தில் பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் புதிய கடற்கரை செல்லும் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக ஆயுதத்துடன் சிலர் சுற்றி திரிவதாக வெளிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பட்டாகத்தியுடன் நின்றிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது ஒருவர் போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பிடிபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நிரஞ்சன் (19), ராம்குமார் (25), கார்த்தி (26), சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள எர்ணாவூரை சேர்ந்த பூமிநாதன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் வெளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். எதற்காக அவர்கள் ஆயுதங்களுடன் நாகப்பட்டினம் வந்தார்கள்? கொலை, கொள்ளையில் ஈடுபட வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சுற்றித்திரிந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article