சுரண்டை அருகே கோயிலில் கேமராவை உடைத்த முதியவர் கைது

2 months ago 10

சுரண்டை,நவ.13: சுரண்டை அருகே உள்ள இரட்டை குளத்தில் பிரசித்திபெற்ற சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக முன்னாள் நிர்வாகியான இரட்டைகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகையா(64) என்பவருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. தற்போது அந்த கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முருகையா நேற்று முன் தினம் இரவு கோயில் கேமராவை உடைத்துள்ளார். அதை தட்டி கேட்ட பொதுமக்களிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகையாவை கைது செய்தனர்.

The post சுரண்டை அருகே கோயிலில் கேமராவை உடைத்த முதியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article