சுப்மன் கில், பட்லர் அரைசதம்... ஐதராபாத்துக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

12 hours ago 2

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே ஐதராபாத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக இந்த இணை பவர்பிளேவான 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன் எடுத்துள்ளது. இதில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ரன் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து பட்லர் களம் இறங்கினார். மறுபுறம அதிரடியாக ஆடிய கில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்தில் 76 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இதில் பட்லர் அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷாரூக் கான் களம் இறங்கினார். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட், கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குட ஐதராபாத் ஆட உள்ளது. 

Read Entire Article