சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை தமிழக அரசு நியமித்ததை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளரான ஐ.எஸ்.இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.