சிவகிரி, ஜன.9: தென்காசி மாவட்டம் சிவகிரியில் ரூ.1.95 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலக கட்டிட பணிகளை வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் பார்வையிட்டார். இக்கட்டிடத்திற்கான பூமிபூஜை விழா கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அனிதா சாந்தனி ஆகியோர் பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் கட்டுமான பணிகளை வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த கேட்டுக் கொண்டார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் மனோகரன், மதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரிச்சாமி, சார்பதிவாளர் அமுதா, பத்திர சங்க தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சிவகிரியில் ரூ1.95 கோடியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிட பணியை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.