ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து, 15 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75).
இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன் கவிசங்கர், மகள் பானுமதி ஆகியோருக்கு திருமணமான நிலையில், ராமசாமி தன் மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.