சிவகாசி: சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிச்சன்நாயக்கன்பட்டி அருகே போடுரெட்டியபட்டியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று ‘நீராத்திலிங்கம் ஃபயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 40-க்கும் அதிகமான அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.