சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை - நடந்தது என்ன?

17 hours ago 4

சென்னை: பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (மே 29) அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் 24-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானார். மருத்துவ மாணவியின் பாதுகாப்பில் கல்லூரி நிர்வாகம் சமரசம் செய்து கொண்டதை கண்டித்தும், முறையான பாதுகாப்பு மற்றும் மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளுக்காக அந்த கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article