“சிவகங்கை பெண் காவல் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” - தினகரன்

2 hours ago 1

சென்னை: “சிவகங்கையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விசிக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த விசிகவைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. காவல் நிலையத்துக்குள் புகுந்து பணியிலிருக்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது நடைபெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

Read Entire Article