சிறைக் கைதிகளை வழக்கறிஞர்கள் நேரடியாக சந்தித்துப் பேச எந்த தடையும் கூடாது: சென்னை ஐகோர்ட்

2 hours ago 4

சென்னை: புழல் சிறையில் கைதிகள் தங்களது வழக்கறிஞர்களுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே பேச வேண்டும் என விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதுபோல எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என சிறைத் துறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஆனந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படும். சிறையில் கைதிகளுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்பன போன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்றது மட்டுமின்றி, கைதிகளுக்கான சட்ட உரிமையை பறிப்பது போலாகி விடும். எனவே கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

Read Entire Article