சிறுவனை சரமாரி தாக்கி பணம், செல்போன் பறிப்பு

2 months ago 9

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு, பாடி குப்பம் மெயின் ரோடு வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சிறுவனை வழிமறித்து, ‘அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும். உனது செல்போனை கொடு,’ என கேட்டுள்ளனர். சிறுவன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் அவனை சரமாரியாக தாக்கி அவனது செல்போன் மற்றும் ரூ.3,800 ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுவனை சரமாரி தாக்கி பணம், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article