சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

3 months ago 12

திருவொற்றியூர்: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த் (27). இவர், கடந்த 2020ம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிரசாந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Read Entire Article