உடுமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மன்னூர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (36). இவரது மனைவி கவுசல்யா (32). 2 மகள்கள் உள்ளனர். விவேகானந்தனின் தம்பி கார்த்திக் குமார் (34) ஈரோட்டில் இருந்து மனைவி கனிமொழி (28)2 மகள்களுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். நேற்று இரு குடும்பத்தினரும் திருமூர்த்தி மலைக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு பிஏபி கால்வாயில் குளித்தனர். அப்போது ஒரு சிறுமி நீரில் மூழ்கவே அவரை மீட்க கார்த்திக் குமார், கவுசல்யா, கனிமொழி ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர். அப்போது அவர்களும் மூழ்கினர். உள்ளூர் இளைஞர்கள் சிறுமியை காப்பாற்றினர். அதற்குள் கவுசல்யாவும், கார்த்திக் குமாரும் இறந்தனர்.
The post சிறுமியை மீட்க வாய்க்காலில் இறங்கிய பெண் உட்பட 2 பேர் மூழ்கி பலி appeared first on Dinakaran.