வேலூர், பிப்.15: வேலூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் 18 வயது வாலிபர், கூலித்தொழிலாளி. இவருக்கும் அங்குள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து பேசி வந்தனர். பின்னர் இருவரும் காதலித்து வந்தார்களாம். இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதனையில் சிறுமி கர்ப்பம் என்பதை அறிந்த டாக்டர்கள் உடனடியாக வேலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் வேலூர் அருகே appeared first on Dinakaran.