கோபால்பட்டி, நவ. 26: நத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம் (25). இவர் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் சாணார்பட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்தனர். விசாரணையில் சந்தானம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சந்தானத்தை கைது செய்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.