ஈரோடு, மே 14: பெருந்துறையில் 2 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டூவீலர் மெக்கானிக்கை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (39). இவர், பெருந்துறை பகுதியில் டூவீலர் மெக்கானிக்காக அங்குள்ள பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
விஜயகுமார் நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் என, அங்கு சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது மற்றும் 7 வயதுடைய இரு சிறுமிகளை சாக்லேட் தருவதாக, பட்டறைக்குள் அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட விஜயகுமார் மீது போக்சோ வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின்னர், ஈரோடு மகிளா நீதிமன்ற உத்தரவுப்படி, விஜயகுமாரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம்; மெக்கானிக் போக்சோவில் கைது appeared first on Dinakaran.