சிவகங்கை, மார்ச் 26: காளையார்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை கடந்த 17.11.2016 அன்றிலிருந்து காணவில்லை. இதுகுறித்த புகாரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காளையார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிவா (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட சிவாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.