சென்னை: சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் கீழ் 2023ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக வளாகத்தில்செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன், முன்னிலையில் இவ் விழா நடைபெற்றது. உயர்த்தப்பட்ட வீதத்தில் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
The post சிறந்த நூலாசிரியர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் appeared first on Dinakaran.