புதுச்சேரி: “சிபிஐ வழக்குக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “புதுச்சேரி பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் 63 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவர் கைதாகியுள்ள நிலையில், அவரது டைரி, செல்போன்கள், சிபிஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துறையில் புதிய பேருந்து நிலையம் கட்டியது, குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.