சென்னை: கடந்த காலங்களில் சிபாரிசுகள் அடிப்படையில் தரப்பட்ட பத்ம விருதுகள், தற்போதைய ஆட்சியில் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
நடப்பாண்டுக்கான பத்ம விருது பெறவுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பத்ம விருதுகளை பெறவுள்ள நல்லி குப்பசாமி (தொழில்), ஷோபனா (கலை) உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.