சின்னசேலம் அருகே போலீஸ் போல நடித்து நூதன முறையில் பணம் திருட்டு

2 months ago 9

சின்னசேலம், டிச. 18: சின்னசேலம் அருகே வயதான நபரிடம் போலீஸ் போல நடித்து ₹40,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செங்கோட்டையன் (64). இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான 2 மாடுகளை விற்றுவிட்டு, ₹40,000 பணத்தை எடுத்துக்கொண்டு, கூட்ரோடு மேம்பாலத்தில் சுமார் 3.30 மணியளவில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். மேலும் இவர் பணத்தை தனது டிராயர் பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது இவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் விவசாயி செங்கோட்டையனை வழிமறித்து நீ கஞ்சா வைத்திருக்கிறாயா என்று கூறியதுடன், நாங்கள் போலீஸ், உன்னை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்துள்ளனர். அப்போது செங்கோட்டையனின் டிராயர் பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ₹40 ஆயிரத்தை அவர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செங்கோட்டையன் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post சின்னசேலம் அருகே போலீஸ் போல நடித்து நூதன முறையில் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article