சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு - கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

4 months ago 31

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் சொத்துக்களை மீட்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக பெரம்பலூர், திருநெல்வேலி, காரைக்கால், சேலம் என தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் இவை தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது.

Read Entire Article