
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய், டென்மார்க் வீரரான ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த பிரனாய், அடுத்த இரு செட்களை 21-16, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.