சிகார் லைட்டர், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை: சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

7 months ago 34

சிவகாசி: சிகார் லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகார் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, சிகார் லைட்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி தீப்பெட்டித் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

Read Entire Article