சாவர்க்கர் பற்றி அவதூறு: ராகுல் காந்திக்கு ஜாமீன்

4 months ago 15

மும்பை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். அங்கு ராகுல், சாவர்க்கர் எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார். அந்த உரைக்கு ஆட்சேபம் தெரிவித்த சாவர்க்கர் பேத்தி, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, புனே சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ராகுல் காந்தி நீதிபதி முன்பு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுலுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும், ரூ.25,000 பிணைத் தொகையுடன் செலுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார்,நீதிமன்றத்தில் ஆஜராக ராகுலுக்கு நிரந்தர விலக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.

The post சாவர்க்கர் பற்றி அவதூறு: ராகுல் காந்திக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Read Entire Article