சாலையில் படர்ந்த ஆகாய தாமரைகளால் விபத்து அபாயம்

1 week ago 3

இடைப்பாடி, பிப்.1: இடைப்பாடி பெரிய ஏரி நிரம்பிய நிலையில், ஆகாய தாமரைகள் வெளியேறி சாலையில் படர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால், சரபங்காவில் நீர்வரத்து அதிகரித்து இடைப்பாடி அருகே நைனாம்பட்டியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. அங்கிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் செல்கிறது. இதனால், ஏரியில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாய தாமரைகள் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையில் படிந்த பாசனத்தில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனிடையே ஆகாய தாமரைகள் பூத்து குலுங்குவது ரம்மியமாக உள்ளது. எனவே, பெரிய ஏரியிலிருந்து வெளியேறி சாலையை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் படர்ந்த ஆகாய தாமரைகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article