உடுமலை, பிப். 24: உடுமலை ராமசாமி நகரில் இருந்து பழனியாண்டவர் நகர் வழியாக கொழுமத்துக்கு சாலை செல்கிறது. தினசரி இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் இந்த சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த வந்த நகராட்சி ஊழியர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், சிறிது நேரத்திலேயே போக்குவரத்து சீரானது.
The post சாலையில் திடீரென விழுந்த ராட்சத மரம் appeared first on Dinakaran.